உத்தரப்பிரதேச மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் மக்கள்!!

0

நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது உத்தரப்பிரதேச மாநில முதல்வருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாநில முதல்வர்:

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது வரை நாட்டில் சுமார் 1.36 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தற்போது நாட்டில் தடுப்பூசி வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாட்டு பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது போல் தடுப்பூசி திருவிழாவும் நடைபெற்றது. இருந்தும் கூட நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் அடுத்த 4 நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இந்நிலையில் தற்போது நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டவர்களிடையே மிக அதிகமான அளவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தன்னை வீட்டிலே தனிமை படுத்திக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here