‘லெஜெண்ட்’ சரவணா படத்தில் இதுக்கு தான் நடிக்க வந்தேன் – நடிகை ஊர்வசி ஓபன் டாக்!!

0

“லெஜெண்ட்”சரவணா நடித்து வரும் புதிய படத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தேலா தான் எதற்காக அந்த திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என்ற காரணத்தை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பதிவு காட்டு தீயாய் பரவி வருகின்றது.

4 மொழிகளில் மாஸ் திரைப்படம்

தமிழ் திரைப்படங்களில் பலர் தற்போது நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தின் முன்னணி துணிக்கடை, நகைக்கடை என்று நடத்தி வருபவர் தான் ‘லெஜெண்ட்”சரவணா என்று அழைக்கப்படும் சரவணன் அருள். இவர் ஆரம்பத்தில் தனது கடையின் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

இவர் நடித்ததை அடுத்து பல நகைக்கடைக்காரர்கள் தங்களது நகைக்கடைக்கு விளம்பர மாடலாக நடித்தது வேறு கதை. இப்படியாக இருக்க இவர் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி இயக்கி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகையாக நடிக்க அனைத்து கோலிவுட் நடிகைகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், அனைத்து நடிகைகளும் ஒரு காரணத்தை கூறி நடிக்க சம்மதிக்கவில்லையாம். “லேடி சூப்பர்ஸ்டார்’நயன்தரவிடம் கூட 10 கோடி ரூபாய் சம்பளத்தில் நடிக்க கேட்டனாராம்.

என்ன இப்படி டிரஸ் மாத்துறீங்க – கலர்கலர் உடையில் கலக்கும் சமந்தா!!

ஆனால், கால்ஷீட் இல்லாத காரணத்தால் நயன்தாரா நடிக்கவில்லையாம். இப்படியாக இருக்க இந்த படத்தில் பிரபல நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடிக்க ஒப்பந்தமானார். ஒரு படத்தில் தான் நடிப்பது என்றால் தான் எதற்காக அந்த படத்தினை தேர்வு செய்ததாக ஊர்வசி தனது ரசிகர்களுக்கு விளக்கம் கொடுப்பது வழக்கம். அவர் இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கான காரணம் இந்த படத்தில் அவருக்கு ஐஐடி மாணவி வேடமாம். இந்த காரணத்திற்காக தான் ஊர்வசி நடிக்க ஒத்துக்கொண்டாராம். ஐஐடி மாணவியாக நடிக்க வேண்டும் என்பது அவரது கனவாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here