மாநில மொழிகளுக்கு ஏற்ப யுபிஎஸ்சி தேர்வை நடத்துவது குறித்த வழக்கில், இன்னும் 8 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மத்திய அமைச்சகத்தை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய உத்தரவு:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வின் மூலம் மத்திய அரசு பணிகளான மாவட்ட ஆட்சியர், ஐபிஎஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த யுபிஎஸ்சி தேர்வை அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்ற வழக்கு சில நாட்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இது குறித்த முக்கிய உத்தரவை நீதிபதிகள் அமர்வு தற்போது வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு எடுத்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இதில் முக்கிய உத்தரவு ஒன்றை மத்திய அமைச்சகத்துக்கு அறிவித்துள்ளது. அதாவது, சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் இன்னும் 8 வாரத்திற்குள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத் தகுந்தது. மத்திய அரசின் உத்தரவை அடுத்து இதன் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இதனால், மக்கள் மத்திய அரசின் முக்கிய முடிவை எதிர்நோக்கி உள்ளனர் என்பது கவனிக்கத் தகுந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்