இந்தியாவில் ஆன்லைன் பரிவர்த்தனை என்று சொல்லப்படும் UPI சேவையை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த UPI சேவை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இனி பேருந்துகளிலும் உபயோகப்படுத்துவதற்கான முயற்சியை கேரள அரசு மேற்கொண்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது கேரளாவில் உள்ள அரசு பேருந்துகளில் இன்று UPI செயலில் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கேரள போக்குவரத்து துறை மந்திரி அந்தோணி ராஜ் தொடங்கி வைத்தார். இது குறித்து அவர், இனி பயணிகள் பஸ்களில் வைக்கப்பட்டிருக்கும் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து நேரடியாக டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
விதவைகளுக்கான மாதம் ரூ.1500 பென்ஷன் தொகை…, பெறுவது எப்படி?? முழு விவரம் உள்ளே!!
மேலும் இந்த திட்டம் திருவனந்தபுர மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்ட நிலையில் வெற்றி அடைந்தால் மற்ற இடங்களிலும் கொண்டு வரப்பட்டு என தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் இனி பேருந்துகளில் நடத்துனர், பயணிகளுக்கு இடையே ஏற்படும் சில்லறை பிரச்சனை வராது என்றும் அவர் கூறியுள்ளார்.