மேற்கு உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் ஒரு வினோதமான திருட்டு ஒன்று நடந்து வந்துள்ளது. 7 பேர் கொண்ட ஒரு குழுவாக சேர்ந்து திருடி வந்துள்ளனர். அதை கண்டறிந்த உத்திரபிரதேச போலீசார் அவர்களை உடனே கைது செய்து விசாரித்தனர்.
இறந்தவர்களிடம் இருந்து துணிகள் திருட்டு
பாக்பத் என்னும் மாவட்டம் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது இந்த மாவட்டத்தில் ஒரு ஏழு பேர் கொண்ட குழுவாக ஒரு கும்பல் ஒரு வினோதமான திருட்டு வாடிக்கையாக செய்து வந்துள்ளது. அது என்னவென்றால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்ளுக்கு தகனம் செய்ய பயன்படுத்தும் துணிகள் மற்றும் கவசங்கள் போன்றவற்றை தகனம் செய்த பின் தோண்டி எடுத்து அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை திருடி வந்துள்ளனர்.
இதுவரை 527 பெட்ஷீட்கள் 127 குர்த்தாக்கள் 52 வெள்ளை புடவைகள் மற்றும் வேறு சில ஆடைகளையும் திருடியுள்ளனர். அதனை அவர்கள் மீண்டும் சலவை செய்து புது துணி போல் அப்பகுதியில் உள்ள துணி கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகளிடம் விற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பராத்தின் வட்ட அதிகாரி (சிஓ) அலோக் சிங் கூறுகையில் திருட்டுக் கும்பலின் ஏழு பேரில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர்கள் அந்த துணியில் குவாலியர் நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை பயன்படுத்தியதாகவும் இறந்தவர்களிடமிருந்து துணிகளை திருடி விற்பதை வழக்கமாக பல ஆண்டு காலமாக கைதானவர்கள் செய்து வருகின்றனர் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.