கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
மத்திய கல்வி துறை அமைச்சர்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மத்திய கல்வித்துறை அமைச்சரான ரமேஷ் பொக்கிரியாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட அவர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, மத்திய கல்வித்துறை பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ரமேஷ் பொக்ரியால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவிட் தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!