நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து பாலிவுட் விமர்சகர் உமர் சந்துரு மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
சமந்தா – நாக சைதன்யா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் தற்போது உருவான சாகுந்தலம் திரைப்படம் ரிலீசுக்காக காத்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவரும் கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து வாங்கி பிரிந்து சென்று, அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் அவர்கள் மீண்டும் சேர வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர் நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர். இதை தொடர்ந்து பாலிவுட் விமர்சகர் உமர் சந்துரு சமீபத்தில் சமந்தா விவாகரத்து குறித்து டிவீட் செய்து சர்ச்சையை கிளப்பினார். இந்த நிலையில் மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அதாவது அந்த பதிவில், நாக சைதன்யா சமந்தாவை தனித்துமான கேரக்டரில் நடிக்க கூடாது என்றும், கிளாமர் தரும் ஆடைகளை அணியாதே, இரவு நேரத்தில் party க்கு செல்லாதே மற்றும் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடாதே என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாக சைதன்யாவை கல்யாணம் செய்தது தான் நான் பண்ண பெரிய தப்பு என்று சமந்தா கூறியதாக உமர் சந்துரு குறிப்பிட்டுள்ளார். தற்போது அவரின் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.