
பாலிவுட் விமர்சகர் உமர் சந்துரு நடிகர் அஜித்குமார் குறித்து வெளியிட்ட ட்வீட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார்:
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டது. தற்போது மக்கள் அனைவரும் அவரின் அடுத்த படமான ஏகே 62 படத்திற்காக காத்து கொண்டிருக்கின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர் பிரபல நடிகையான ஷாலினியை கடந்த 2000ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். திருமணம் முடிந்து 23 வருடங்கள் கடந்த போதிலும் அஜித் எந்த கிசுகிசுவிலும் சிக்கியது இல்லை. இந்த நிலையில் பாலிவுட் விமர்சகர் உமர் சந்துரு அஜித் ரசிகர்களிடையே பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.
அம்மா பேச்சை கேட்கவே வேண்டாம்.., இறந்துபோன கணவர் மீனாவுக்கு போட்ட கண்டிஷன்.., அவரே சொன்ன விஷயம்!!
அதாவது நடிகர் அஜித்குமார் தற்போது ஒரு பெண்ணிடம் கள்ளத்தொடர்பில் இருந்து வருவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் உனக்கு வேற வேலையே இல்லையா, இப்படி அடுத்தவங்களை தப்பா காமிச்சு நீ பணம் சம்பாதிக்காணுமா என்று உமர் சந்துருவை வெளுத்து வாங்கி வருகின்றனர்.