மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி (பட்டப்படிப்புகள்) படிப்பதற்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஒப்புதல் வழங்கி உள்ளது.
யுஜிசி ஒப்புதல்:
ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கும் முறை கடந்த 2016ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி தற்போது இதற்கு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளில் இரண்டு பட்டபடிப்பிற்கான சான்றிதழ்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகிறது.
இந்த முறைப்படி, ஒரு பல்கலைக்கழகத்தில் முழுநேரமாக ஒரு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர், அந்த பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறொரு பல்கலைக்கழத்திலோ ஆன்லைன் மூலமாக அல்லது தொலைதூரக் கல்வி வாயிலாக மற்றொரு டிகிரி படிக்க முடியும். தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இக்காலத்தில் மாணவர்கள் பட்டபடிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்புகளை படிக்க இது சிறந்த வாய்ப்பாக அமையும் என யுஜிசி தெரிவித்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |