கோல் மழை பொழிந்த ரொனால்டோவின் போர்ச்சுகல்…, சாம்பியன்ஸ் லீக்கின் தகுதி சுற்றில் 2வது வெற்றி!!

0
கோல் மழை பொழிந்த ரொனால்டோவின் போர்ச்சுகல்..., சாம்பியன்ஸ் லீக்கின் தகுதி சுற்றில் 2வது வெற்றி!!
கோல் மழை பொழிந்த ரொனால்டோவின் போர்ச்சுகல்..., சாம்பியன்ஸ் லீக்கின் தகுதி சுற்றில் 2வது வெற்றி!!

UEFA யூரோ சாம்பியன்ஸ் லீக்கின் தகுதி சுற்றில், ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியானது, எதிரணியை ஒரு கோல் கூட போட விடாமல் தொடர்ந்து கோல் மழை பொழிந்து அசத்தலான வெற்றி பெற்றது.

போர்ச்சுகல் அணி:

கால்பந்து நட்சத்திர வீரரான ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி தற்போது UEFA யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான தகுதி சுற்றில் விளையாடி வருகிறது. முதல் தகுதி சுற்று போட்டியில், லிச்சென்ஸ்டைன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி வீழ்த்தி அசத்தியது. இதனை தொடர்ந்து, 2வது தகுதி சுற்று போட்டியில், லக்சம்பர்க் அணிக்கு எதிராக போர்ச்சுகல் அணி விளையாடியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில், 9 வது நிமிடத்திலேயே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொனால்டோ கோல் ஒன்றை அடித்தார். இவரை தொடர்ந்து, போர்ச்சுகல் அணியின் ஜோவோ பெலிக்ஸ் மற்றும் பெர்னார்டோ சில்வா 15 மற்றும் 18 வது நிமிடத்தில் கோல் அடிக்க, மீண்டும் ரொனால்டோ 31 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

ஆத்தாடி இது என்ன போஸ்.., அதுவு இந்த வயசுல..,கண்ணை பறிக்கும் ஹாட் பியூட்டியில் ஸ்ரேயா!!

இதனால், ஆட்டத்தின் முதல் போட்டியில், போர்ச்சுகல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், போர்ச்சுகல் அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. அதாவது, ஒடாவியோ மற்றும் ரஃபேல் லியோ 77 மற்றும் 88 வது நிமிடத்தில் கோல் அடிக்க, போர்ச்சுகல் அணி ஆட்ட நேர முடிவில் 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here