‘இன்னொரு படம் பண்ணினால் அது இவரோட தான்’….,உதயநிதி முடிவு….,

0
'இன்னொரு படம் பண்ணினால் அது இவரோட தான்'....,உதயநிதி முடிவு....,
'இன்னொரு படம் பண்ணினால் அது இவரோட தான்'....,உதயநிதி முடிவு....,

தற்போது பிசியாக அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கப்போவது இல்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த வகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இப்போது விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்திருக்கும் உதயநிதி, சினிமாவில் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.

அரசியல் பின்புலத்தை கருவாக கொண்டு தயாராகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தை பிரபல வெற்றிப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் நிச்சயமாக சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘மாமன்னன்’ படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

‘மன்னா மாமான்னா’….,ஏ.ஆர்.ரஹ்மானின் தெறிக்கும் இசை இன்று முதல்….,

இந்நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘கமல் சார் தயாரிப்பில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அமைச்சர் பதவி கிடைத்த பின் வேலைப்பளு அதிகரித்ததால் நடிக்க முடியவில்லை. இன்னும் 3 ஆண்டுகளுக்கு படம் நடிக்க வாய்ப்பு இல்லை. அடுத்து இன்னொரு படம் நடித்தால் அது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here