தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தெரு நாய்கள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் உத்திரபிரதேச காஸியாபாத் பகுதியில் 14 வயது சிறுவன், ஒரு மாதத்திற்கு முன்னதாக நாயால் கடிபட்டுள்ளார். இது குறித்து அச்சிறுவன் வீட்டில் தெரிவிக்காததால், ரேபிஸ் நோய் தொற்று உடல் முழுவதும் பரவி உள்ளது. திடீரென விலங்குகளை போல் சத்தம் எழுப்பிய அச்சிறுவனை, பல்வேறு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அனைத்து மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு நோய் தொற்று பரவி உள்ளதாக கைவிரித்தனர். இதனால் தந்தையின் மடியிலே அச்சிறுவன் வலியால் துடிதுடித்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அச்சிறுவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Spicy One Chip சாப்பிட்ட சிறுவன்.., பரிதாபமாக உயிரிழந்த கொடூரம்.., விளையாட்டே வினையாகிவிட்டதே!!!
View this post on Instagram