தட்டச்சு தேர்விலும் முறைகேடு – பெண் ஊழியர் உட்பட 4 பேரிடம் தொடங்கியது விசாரணை..!

0

மதுரையில் நடைபெற்ற தட்டச்சு தேர்விலும் ஆள்மாறாட்ட முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர்.

சென்னையில் உள்ள அரசுத்தேர்வு துறையில் சேர்ந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பெண் மரகதம் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். ஆனால் இவருக்கு தட்டச்சு செய்ய தெரியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரிக்கையில் அவர் தட்டச்சு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றது தெரிய வந்து உள்ளது.

இவர் மதுரை காமராஜர் சாலையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் தட்டச்சு பயின்றதாகவும், அந்த மையத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனக்கு தேர்வில் தேர்ச்சி அடைய உதவியதாகவும் தெரிவித்து உள்ளார். இந்த தேர்வு மதுரையில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்ததால் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் அரசு தேர்வுத்துறை உதவி இயக்குநர் அழகு அரசு புகார் செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த மையத்தில் இதுவரை படித்தவர்களின் விபரங்களை சேகரித்து முறைகேட்டில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேரிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here