சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளி மாணவியின் மரணம் குறித்து மேலும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆசிரியர்கள் கைது:
கள்ளக்குறிச்சி மாவட்டம்,சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மாணவியின் பிரேத பரிசோதனையில் அரசு மருத்துவர்களின் கூற்று பெற்றோர் மற்றும் உறவினருக்கு திருப்தி தரவில்லை என்பதால் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டம் கலவரமாக மாறி பள்ளி வளாகத்தையும் மற்றும் 18க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளிலும் தீ வைத்து வன்முறையில் மக்கள் இறங்கினர்.
இதில் ஏராளமான போலீஸ்காரர்களுக்கும் காயம் ஏற்பட்டது.இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாணவி எழுதி வைத்ததாக கூறிய கடிதத்தில் குறிப்பிட்ட வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
மேலும் மாணவி ஸ்ரீமதி தாயாரின் வேண்டுகோளின்படி ஸ்ரீமதி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்ரீமதி உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும் மற்றும் பரிசோதனை முடிந்தவுடன் எந்த வன்முறை போராட்டம் இல்லாமல் நல்லபடியாக உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடபட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்