நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று எரித்திரியா நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கட்டாய திருமணம்:
இந்திய மக்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடைமொழிக்கு ஏற்ப திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு மாறுபாடாக ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டில் ஒரு பெண் 2 ஆண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இந்த நாட்டில் அடிக்கடி உள்நாட்டு போர் மற்றும் அண்டை நாடுகளுடனும் போர் நடைபெற்று வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் அங்கு ஆண்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது. ஆனால் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட இரட்டிப்பாக காணப்படுகிறது. இந்த காரணத்தால் பல பெண்கள் திருமணம் ஆகாமல் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு எரித்திரியா அரசு ஒரு சட்டத்தினை அமல்படுத்தியுள்ளது.
அதாவது, ஆண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்களும் இரண்டு பெண்களை காட்டாயமாக திருமணம் செய்ய வேண்டும். மேலும், கணவரின் முதல் மனைவி இந்த திருமணத்தை எதிர்க்கக் கூடாது அவ்வாறு எதிர்த்தால் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.