உலகின் முன்னணி பணக்காரரும், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்க் 2.0 என்ற அல்டிமேட் திட்டம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மஸ்கின் புதிய திட்டம் :
ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கினார். இந்த நிறுவனத்தின் பங்குகளை இவர் வாங்கியதில் இருந்து, பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி, தான் பதவியேற்றதும் twitter நிறுவனத்தில் பணிபுரிந்து 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது போக அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்போருக்கு மாதம் 8 டாலர் கட்டணம் போன்ற பல அதிரடி திட்டங்களையும் கொண்டு வருவேன் என அறிவித்தார். இந்த நிலையில் மஸ்க், 2.0 அல்டிமேட் என்ற புதிய திட்டத்தை துவக்கியுள்ளார். இந்தத் திட்டத்தின் படி ட்விட்டர் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, புதிய ஊழியர்களை பணியமர்த்தும் நடவடிக்கை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சர்வதேச திட்டம்., ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் இன்று தொடக்கம்!!
இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் தரம் மேலும் அதிகரிக்கும் என்றும், பயனர்களுக்கான சிறப்பு வாய்ந்த அம்சங்கள் வெளியாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். விரைவில் புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடங்கும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து, டிசம்பர் 2ஆம் தேதிக்கு மேல் ப்ளூ டிக் கணக்கு வைத்திருப்போருக்கான கட்டண வசூல் தொடங்கும் என ட்விட்டர் நிறுவனத்தின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன