இந்தியாவில் பிரபலமாகும் ஷேர்சாட் – கைப்பற்ற நினைக்கும் ட்விட்டர் நிறுவனம்!!

0

தற்போது இந்தியாவில் ஷேர்ச்சாட் செயலியை அதிகமான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஷேர்ச்சாட் செயலியை ட்விட்டர் நிறுவனம் வாங்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஷேர்சாட்:

இந்தியாவில் தற்போது முன்னணி சமூகவலைத்தள செயலியாக திகழ்வது தான் ட்விட்டர். இதனை உலக நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது ஷேர்சாட் செயலி. இந்த செயலியை இந்தியாவில் 160 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான செயலி தான் மோஜ். தற்போது இந்தியாவில் டிக் டாக் செயலி தடைப்பட்ட நிலையில் இந்த மோஜ் செயலியை தான் இந்தியாவில் பயனாளர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இதுவரை இந்த செயலி 80 மில்லியன் பதிவிறக்கங்களை தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளது. மேலும் குறுகிய காலத்தில் இவ்வளவு பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையையும் இந்த செயலி பெற்றது. தற்போது ட்விட்டர் நிறுவனம் ஷேர்சாட் செயலியை கைப்பற்றுவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. இதை வாங்கினால் இதனுடன் மோஜ் செயலியையும் ட்விட்டர் நிறுவனம் வாங்கிக்கொள்ளும்.

குக் வித் கோமாளியில் மோதிக்கொள்ளும் வனிதா, பாபா மாஸ்டர் – பல அட்டகாசங்களுடன் வெளியான ப்ரோமோ!!

பின்பு டிக் டாக் செயலியை போல் மோஜ் செயலியை உலக அளவில் பிரபலப்படுத்த உள்ளதாக தெரிகிறது. மேலும் இதற்காக ட்விட்டர் நிறுவனம் சுமார் 1.1 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்ய தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here