சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மற்றும் அமமுக கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் இன்று அதிரடியாக டிடிவி தினகரன் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல்:
தேர்தல் கூட்டணி குறித்து தொடர்ந்து இழுபறி இருந்து வந்த நிலையில் ஒரு வழியாக தேமுதிக கட்சி அமமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால் இந்த தேர்தலில் தேமுதிக கட்சி போட்டியிடுவது தற்போது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே கூட்டணி குறித்து அதிமுகவுடன் தொடர்ந்து இழுபறி இருந்து வந்தது. முடிவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி அமமுக கட்சியுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளது. ஏற்கனவே அமமுக அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ளது. இந்நிலையில் தேமுதிக மற்றும் அமமுக கட்சி இணைந்துள்ளது. தற்போது சென்னை தேமுதிக அலுவலகத்திற்கு சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை டிடிவி தினகரனை நேரில் பார்க்க சென்றுள்ளார். மேலும் அதிமுகவில் இருந்து விலகிய தேமுதிகவிற்கு அமமுக கூட்டணியில் 60 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவலினால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.