ஹிந்தி திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் பூஷன் குமார். இவர் தன்னுடைய நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு உள்ளார். இதையடுத்து அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.
தற்போதைய சூழலில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. மேலும் அனைத்து துறை சார்ந்த பெண்களும் இதனால் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனை களைய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் தவறுகள் நிகழத்தான் செய்கிறது. அந்த வகையில் ஹிந்தி படங்கள் தயாரித்து பிரபலமான தயாரிப்பாளர் பூஷன் குமார் மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்து உள்ளார்.
அதாவது பூஷன் குமார் ஹிந்தி திரைத்துறையில் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். மேலும் இவர் டி-சீரிஸின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். இந்நிலையில் இவர் தனது நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லி மாடல் அழகியும் , நடிகையுமான ஒருவரிடம் அத்துமீறி உள்ளார். மேலும் இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக கூறியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் அந்தரங்க வீடியோவை இணையதளங்களில் வெளியிட போவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்து உள்ளார். இது குறித்து காவல்துறையினர் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்