ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து அமெரிக்கா தற்போது அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த டொனால்ட் ட்ரம்ப் ‘ வரலாற்றில் அமெரிக்கா ஒருபோதும் போரிலிருந்து இப்படி மோசமான முறையில் விலகியதில்லை என்று கூறியுள்ளார்.
ட்ரம்பின் ஆவேசம்:
ஆப்கானிஸ்தானில் கடந்த பல ஆண்டுகளாக போரானது நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த போரானது முடிவுக்கு வந்துள்ளது. இதில் தாலிபான்கள் வெற்றியடைந்துள்ளனர். தாலிபான்கள் தீவிர மதவாதிகள் என்பதால் அங்கு இருக்கும் மக்கள் அச்சத்தால் வாடிவருகின்றனர். அதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிவருகின்றனர்.
தற்போது பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் 20 ஆண்டுகளுக்கு பின் வெளியேறியுள்ளது. இது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேறுவதில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் இருந்து விலகுவது மிகவும் மோசமானது, வரலாற்றில் அமெரிக்கர்களால் ஒருபோதும் இப்படி கையாளப்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதாவது, “தாலிபான்கள் உடனான போரில் அமெரிக்கா பின் வாங்கியதை குறிப்பிட்டு வரலாற்றில் அமெரிக்கா ஒரு போதும் போரிலிருந்து இப்படி மோசமான முறையில் விலகியதில்லை” என்று ஆவேசமாக விமர்சித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்