‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். ‘KH 234’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்க ‘KH 234’ திரைப்படத்தில் ‘பொன்னியின் செல்வன்’ பிரபலங்கள் நடிகை த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதே போல, பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானும் ‘KH 234’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில், மீண்டும் ஒரு பெரிய திரைப்பட்டாளத்தை இந்த படத்தில் களமிறக்கும் மணிரத்னம் மீது பலத்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.