ஆல்ஃபா, டெல்டா, டெல்டா பிளஸ்.. ரக ரகமாக திரிபுராவை ஆட்டிப்படைக்கும் கொரோனா!!!

0
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றும், 10 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பும், 3 பேருக்கு ஆல்ஃபா வைரஸ் பாதிப்பும் உறுதியாகியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

18 கோடியை தாண்டியது கொரோனாவின் பாதிப்பு - உலகமே அச்சத்தில் உள்ளது!!!

கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்ட போது நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் போதிய மருந்துகள், ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவை இன்றி திணறிவிட்டன. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் குறையத் தொடங்கியது. தற்போது மீண்டும் சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தற்போது, மாநில அரசின் தகவலின்படி திரிபுராவில் 151 பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள ஆய்வகத்திற்கு மரபணு தர ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 10 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்றும், 3 பேருக்கு ஆல்ஃபா வைரஸ் பாதிப்பும், 138 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று பாதிப்பும் உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாம் அலைக்கு காரணமான உருமாறிய டெல்டா ரக வகை கொரோனா என்று நிபுணர்கள் கூறினர். தற்போது இது மீண்டும் டெல்டா ப்ளஸ் ஆக மரபணு மாற்றமடைந்துள்ளது. இது டெல்டா வகையைவிட ஆபத்தானதாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here