திருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை சமயபுரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கடைகள் அடைப்பு:
திருச்சியில் இதுவரை 10,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 142 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது வரை 9,114 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 827 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி தொற்று பரவல் அதிகரித்து உள்ள காரணத்தால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சமயபுரம் பகுதியில் தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
செப்டம்பர் 30ம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் பொதுப்போக்குவரத்து அனுமதி, அனைத்து அலுவலகங்களும் திறப்பு என பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டதே கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருச்சி சமயபுரம் பகுதியில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 2.80 உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!
திருச்சி மாவட்ட ஆட்சியர், வரும் திங்கட்கிழமை முதல் (செப்.28) அடுத்த திங்கள் வரை (அக்.5) வரை அனைத்து கடைகளையும் அடைக்க உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனை மீறி கடைகளை திறந்தால் அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்படும் எனவும் அவர் எச்சரித்து உள்ளார்.