திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் வருகிற ஏப்ரல் 29ம் தேதி தேர் திருவிழா நடைபெற இருப்பதால், அந்த நாளில் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
முழு விடுமுறை அறிவிப்பு :
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் நடைபெற வில்லை. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக வைரஸ் பரவல் குறைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளுடன் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயிலின் தேர் திருவிழா கடந்த ஏப்ரல் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா வருகிற ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாததால், இந்த ஆண்டு அதிக கூட்டம் கூட வாய்ப்புள்ளது. இதனால், இந்த நாளில் முழு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நாளில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்படும் என்றும், இந்த நாளில் கல்வி சார்ந்த தேர்வுகள் எதும் திட்டமிடப்பட்டிருந்தால், அவை திட்டமிட்டபடி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் பொருட்டும், வருகிற மே 7ம் தேதி மாவட்டம் முழுவதும், வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்