வெளி மாநிலத்திலிருந்து வந்தால் 7 நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் – மாநில அரசு அறிவிப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது கொரோனா 2ம் பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை நேற்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு ஏற்கனவே மே 10 வரை டெஹ்ராடூன், ஹரித்வார், உதம் சிங் நகர் மற்றும் நைனிடால் மாவட்டங்களில் ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ விதித்திருந்தது.
இருப்பினும், கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மாநிலத்தில் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் மே 11 காலை 6 மணி முதல் மே 18 காலை 6 மணி வரை ‘கோவிட் ஊரடங்கு உத்தரவு’ விதிக்க உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முழு ஊரடங்கு காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் ”என்று மாநில அமைச்சரவை அமைச்சர் சுபோத் யூனியல் தெரிவித்தார்.
ஷாப்பிங் மால்கள், சந்தைகள், ஜிம்கள், சலூன் கடைகள் , ஸ்பாக்கள், உணவகங்கள் மற்றும் பார்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்படும்.
வெளி மாநிலத்தில் இருந்து வரும் பயணிகள் டெஹ்ராடூன் நிர்வாகத்தின் போர்ட்டலில் தங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் என்றும் அறிவித்துள்ளார். 72 மணி நேரத்திற்கு உள்ளாக எடுத்த ஆர்டி-பி.சி.ஆர் சோதனை எதிர்மறை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று யூனியல் அறிவித்தார்.மேலும், வெளியில் இருந்து வரும் மாநில மக்கள் கட்டாயமாக 7 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, 24 மணி நேரத்தில் 5,890 புதிய COVID-19 வழக்குகள் மற்றும் 180 மரணங்கள் ஒரே நாளில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.