பொருளாதார சரிவால் பல நெருக்கடிகள் ஏற்பட்டு வரும் நிலையில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் தகுந்த பணியாளர்களை பணியமர்த்த TNPSC தேர்வாணையத்தால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன்படி கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு அனைத்து தரப்பினரும் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கான தேர்வு முடிந்து தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் தேர்வாணையம் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் முதல் முறையாக கிராம உதவியாளர் பணிக்கு திருநங்கை ஸ்ருதி என்பவர் தேர்ச்சி பெற்றுள்ளார். அதனால் தேர்வு செய்யப்பட்ட திருநங்கை ஸ்ருதிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கி பாராட்டி உள்ளார்.