இந்தியாவில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் தினமும் நாடு முழுவதும் 200 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்து உள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரயில்கள் இயக்கம்:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பயணியர் ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. வெளிமாநில தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க 366 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் டெல்லியில் இருந்து 15 பயணியர் சிறப்பு ரயில்கள் முதற்கட்டமாக முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதனை விரைவில் 200 ரயில்களாக மாற்ற ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது.
இந்த ரயில்கள் குளிர்சாதன வசதி இல்லாத இரண்டாம் வகுப்பு ரயில்களாக இருக்கும். இதற்கான முன்பதிவு விரைவில் ஆன்லைனில் தொடங்கும் எனவும், மே 22 முதல் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு டிக்கெட்டுகள் வழங்க தொடங்க உள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்து உள்ளது. ஊரடங்கிற்கு முன்பு நாடு முழுவதும் தினமும் 12,000 ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |