ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் வழிமுறையில், பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக IRCTC தங்கள் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பு:
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும், போக்குவரத்து சேவைகளில் ஒன்று ரயில். குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான சேவை கிடைப்பதால் பெரும்பாலான பயணிகள் இதை அதிகம் விரும்புகின்றனர். தற்போது முன்பதிவில்லா, பெட்டிகளில் பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்யும் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, பயணிகள் டிக்கெட்டுகாக கவுண்டர்களில் மணிக்கணக்கில் காத்துக் கிடப்பதை தவிர்ப்பதற்காக, ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதியை IRCTC என்ற ஆன்லைன் ஆப் மூலம் பெறுவதற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆப் வாயிலாக, பயணிகள் இதற்கு முன் 2 கிமீ தூரத்திற்குள் இருந்து, டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய வழிமுறை.., தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!
தற்போது இந்த தூரத்தை அதிகரித்து 5 கிலோமீட்டர் ஆக, ரயில்வே நிர்ணயம் செய்துள்ளது. ரயில்வேயின் இந்த அறிவிப்பால், பயணிகள் அதிக தூரத்தில் இருந்து எளிதில் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து கொள்கின்றனர். இதனால் பயணிகள் நேர இழப்பு, முழுவதும் தவிர்க்கப்படுகிறது.