ரயில் நிலையங்களில் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டு, விரைவில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
உயர்ந்த விலை:
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் போக்குவரத்து சேவைகளில் ஒன்று ரயில். உணவு, கழிப்பிடம் மற்றும் பாதுகாப்பு போன்ற அனைத்து வசதிகளையும் கொண்ட குறைவான கட்டணத்தை அளிக்கும் இந்த ரயில் பயணத்தை பெரும்பாலான மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அங்கிருக்கும் ஸ்டால்கள் மூலம் விற்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி இந்த உணவு பொருட்களின் விலையை உயர்த்த உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி டீ, காபி விலை ரூ.10 லிருந்து ரூ.15 ஆகவும், 4 சப்பாத்தியின் விலை ரூ. 29 லிருந்து ரூ.45 ஆகவும், சாம்பார் சாதத்தின் விலை ரூ. 20 லிருந்து ரூ.30 ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(27.01.2023)-முழு விவரம் உள்ளே!!!
இது போக ஒரு சில உணவுப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட இந்த உணவுப் பொருட்கள் குறித்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் இந்த திடீர் விலை உயர்வு, பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.