ரயில் பயணிகளுக்கு இதுவரை இல்லாத சூப்பர் அப்டேட் ஒன்றை, ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய அப்டேட்:
தொலைதூர போக்குவரத்து சேவைக்கு, பெரும்பாலான மக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் சேவைகளில் ஒன்று ரயில். குறைந்த கட்டணத்தில், நிறைவான சேவையை தரும் இந்த ரயில் பாதுகாப்பானதாக இருப்பதால், பலரும் இதனை தேர்ந்தெடுக்கின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த வகையில் பயணிகளுக்கு, பல்வேறு புதிய அப்டேட்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. பயணிகள் தேவை இல்லாமல் டிக்கெட்டுகாக ரயில் நிலையங்களில் நிற்க கூடாது என்பதற்காக, மொபைல் ஆப் வழியாக முன்பதிவு செய்யும் வசதியை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி ஏற்கனவே, UTS என்ற மொபைல் ஆப் வழியாக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை புறநகர் அல்லாத ரயில் நிலையங்களில் இருந்து, 20 கிலோமீட்டர் வரை முன் பதிவு செய்யும் வசதியை, பயனர்களுக்கு இந்திய ரயில்வே அறிவித்திருந்தது. தற்போது இந்த தூரத்தை 20 கிலோ மீட்டரில் இருந்து 5 கிலோமீட்டர் வரை குறைக்க உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பயணிகளுக்கு ஏற்படும் வீண் அலைச்சல் குறைந்துள்ளது.