ரயில் பயணிகளுக்கு, திருத்தப்பட்ட விதிகளின்படி பயணத்தின் போது தவிர்க்க வேண்டிய சில செயல்கள் குறித்த முக்கியமான வழிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ரயில்வே அறிவிப்பு :
நாடு முழுவதும் மிகப்பெரிய, இணைப்பை கொண்டுள்ள ரயில்வே சேவையை பல பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் பயணிகளுக்கு ஏதுவாக பல புதுப்புது அப்டேட்டுகளை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன்படி திருத்தப்பட்ட புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில், ரயில் பயணத்தின் போது பயணிகள் தவிர்க்க வேண்டிய சில வழிமுறைகளையும், அதை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் குறித்து அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி ரயில்வே மேற்கூரையில் அமர்ந்து ஒருவர் பயணித்தால் அது சட்டப்படி குற்றம். இதில் சம்பந்தப்பட்ட நபருக்கு, 3 மாத சிறை அல்லது ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.
இத பண்ணாத மா ப்ளீஸ்., கெஞ்சி கூத்தாடிய கமல்! எடுத்தெறிந்து பேசிய மகள் ஸ்ருதிஹாசன்!!
இது போக, ரயில் நிர்வாகத்தால் விற்பனை செய்யப்படும் பயணச்சீட்டுகளை சட்டவிரோதமாக விற்றால் ரூ. 10,000 அபராதம் அல்லது 3 வருட சிறை தண்டனை விதிக்கப்படலாம். இது போக, ரயில் பயணத்தில் சக பயணிகளை தாக்குதல், தேவையில்லாமல் அபாய சங்கலியை பிடித்து இழுத்தல், ரயில்வே ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என ரயில்வே எச்சரித்துள்ளது.