ரயில் பயணிகளுக்கு, சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக தமிழகத்திற்கு மட்டும் ரூபாய் 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
கடந்த 2 தினங்களுக்கு முன், இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள், பயணிகளுக்கான கட்டண சலுகைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியானது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை தொடர்ந்து, ரயில் பயணிகளுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக தமிழகத்துக்கு மட்டும் ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால், தமிழகத்திற்கு விரைவில் வந்தே மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC அறிவிப்பால் வெடித்த சர்ச்சை., Group 1 தேர்வு எழுத புதிய கட்டுப்பாடு! தேர்வர்கள் அச்சம்!!
இதுபோக, அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விரைவில் இது சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.