தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கொடைக்கானல். ஊட்டி உள்ளிட்ட குளிர் ஸ்தலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் வார விடுமுறையான இன்று (மே 21) சொல்லவா வேணும்? என்பது போல் கொடைக்கானலில் கூட்டம் அலைமோதுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பெருமாள்மலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து ஊர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு., உடனே முந்துங்கள்!!!
எனவே கொடைக்கானல் மலைச்சாலையில் கழிவறை, பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு நகராட்சி நிர்வாகத்திடம் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.