தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் மீது இருக்கும் அதீத மோகத்தால் வேகமாக சென்று உயிரிழப்புகளை, சேதங்களையும் ஏற்படுத்துகின்றனர். இது போன்ற சாலை விபத்துகளை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை தடுக்க இப்போது போக்குவரத்து துறை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது நெடுஞ்சாலை மற்றும் வளைவு பாதைகளில் அதிகமான விபத்து நடைப்பெறுகிறது என்று ஆய்வு ஓன்று கூறுகிறது.
மேலும் அதிக விபத்துகள் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி என்ற நேரத்தில் தான் தான் நடைபெறுகிறது. ஏன் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில் அதிக விபத்துகள் இந்த நேரத்தில்தான் நடந்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளனர்.