உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 மாநாடு டெல்லியில் நாளை முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்குள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தற்போது இதைத் தொடர்ந்து மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதாவது மற்ற மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் டெல்லிக்குள் நுழைவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்கறிகள், பழங்கள், பால், மருந்து பொருட்கள் போன்றவற்றை ஏற்றிச்செல்லும் அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இந்த பள்ளி மாணவர்களுக்கு “இலவச சைக்கிள்” ஏற்பாடு., வெளியான முக்கிய தகவல்!!!