ரூ.2,000 நோட்டுகளை ஒரு நாளைக்கு ரூ.60,000 வரை மாற்றலாம்? டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு?!!!

0

நாடு முழுவதும் ரூ.2,000 நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதி முதல் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (மே 23) முதல் வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர். அதிலும் வங்கி கணக்கு உடையவர்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் ஒரு நாளைக்கு ரூ.20,000 வரை மட்டுமே எடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரூ.2,000 நோட்டுகளை வணிக வளாகங்களில் வாங்குவார்களா? என வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜாவிடம் கேள்வி எழுப்பினர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களே., இனி இந்த முறையிலான ஆடைகள் தான் அணிய வேண்டும்?? கல்வித்துறை உத்தரவு!!!

இதற்கு பதிலளித்த தலைவர் விக்கிரமராஜா, “கடைக்கு மளிகை பொருட்களை வாங்க வரும் மக்களிடம் ரூ.2,000 நோட்டுகளை வாங்க சொல்லி வணிகர் பேரமைப்பில் முடிவு செய்துள்ளோம். அதேபோல் வங்கியில் ஒரு நாளைக்கு ரூ.20,000 என்பதை ரூ.60,000 வரை மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறோம். இதோடு ரூ.2,000 நோட்டுகளை மாற்ற டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here