தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த தடையால் ஆசையுடன் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆனால் தற்போது குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியில் நீராடி செல்கின்றனர்.