இன்று முதல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை – அறிவிப்பால் நொந்துபோன பொதுமக்கள்!!

0

இன்று முதல் வருகிற மூன்று நாட்களுக்கு கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பொதுமக்களுக்கு தடை :

தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் எடுத்து வருகிறது. இதனால் புத்தாண்டு கடற்கரை கொண்டாட்டத்திற்கு  தடை விதித்து அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றனர். மேலும் இங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மொத்த மாவட்டமும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here