அசாம்மில் நாளை முதல் 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே விதிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சில மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு மற்றும் நிபுணர்களால் விடுக்கப்பட்ட கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை.
தற்போது அஸ்ஸாம் மாநிலத்திலும் இதே போன்ற ஒரு நிலைமை தான் நிலவி வருகிறது. அங்கு குறிப்பாக கோல்பாரா, கோலாகாட், ஜோர்ஹாட், லக்கிம்பூர், சோனித்பூர், பிஸ்வநாத் மற்றும் மோரிகான் ஆகிய 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே நாளை முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழு ஊரடங்கு இந்த மாவட்டங்களில் அமல்படுத்தப்படவுள்ளது.
மேலும் அஸ்ஸாமில் நாளை முதல் அனைத்து பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கும் மொத்த தடை விதிக்கப்பட உள்ளது. தொற்று பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில், ஊரடங்கு உத்தரவு பிற்பகல் 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என ஆறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்