தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை – நடைபெறும் விவரம்!!

0

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை(மே 2) நடைபெறவுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை:

தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட் காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மேலும் 234 தொகுதியிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 2) நடைபேறவுள்ளது. தமிழகத்தில் 76 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு மையத்தில் சராசரியாக 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மேலும் ஒரு மையத்தில் 14 மேசைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு மேசையிலும் ஒரு அலுவலர், ஒவ்வொரு வேட்பாளருக்கும் 14 முகவர்கள் மற்றும் ஓர் முதன்மை அலுவலர் அனுமதிக்கப்படுவர். வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவரமும் காண்பிக்கப்படும்.

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் 5 ஆண்டுகள் சிறை – கொரோனா நோய்பரவல் எதிரொலி!!

வாக்கு பதிவின் பொழுது அவர்களுக்கு அளிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் வரும் விவரங்களில் ஏதேனும் மற்றம் இருந்தால் முகவர்கள் கேள்வி எழுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடையும். அதன்படி சுமார் 30 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காலை 9 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை முன்னணி விவரம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here