தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு கடலோர பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய கூடும். மேலும் நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, மதுரை, தென்காசி, ஈரோடு, திருப்பத்தூர், திருநெல்வேலி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
TNPSC COURSE PACK, BOOK MATERIALS & TEST PACK குறைந்த விலையில் பெற கீழே பூர்த்தி செய்யவும்