தமிழகத்தில் உள்ள ஈரோட்டில் உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்க இருக்கும் நிலையில் இன்றும் மற்றும் நாளையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் 16 பதவிகளுக்காக கிட்டத்தட்ட 42 பேர் மனு தாக்கல் செய்யப்பட்டு அதில் 3 பேர் மனு தள்ளுபடி ஆன நிலையில் 39 பேர் மனு தாக்கல் செய்தனர்.
அதில் 2 பேர் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பேர் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை அதிகாலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்க இருக்கும் நிலையில் அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனை தொடர்ந்து நாளை நடக்கவிருக்கும் தேர்தலில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ஈரோட்டில் இன்று மற்றும் நாளை தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் எந்தவித பிரச்சனை இன்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்