தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்த வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் சில முக்கிய மாவட்டங்களில் அடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதுமட்டுமின்றி மழையினால் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதற்கு மாநகராட்சி தயார் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் கனமழை தொடர்ந்து நிற்காமல் பெய்து வருவதால் சில மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு முக்கிய தகவலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் வெறித்தனமான மழை.,, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க உத்தரவு!!
அதாவது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (15.11.2022) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் விடுப்பு நாளை ஈடுகட்டும் விதமாக சனிக்கிழமை பள்ளி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.