புதுவையில் சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக நாளை நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில் நாளை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுவை:
புதுவையில் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு தேர்தல் பணிகள் அனைத்தும் மிக தீவிரமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனா தொற்றும் அங்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதற்காக நாளை மாலை புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை தரவுள்ளார். இவர் நாளை மாலை 4 மணிக்கு வந்து கூட்டத்தில் பங்குபெறவுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
‘நீட் குறித்த முறைகேடுகளை சிபிஐ கண்காணிக்கும் என நம்பிக்கை உள்ளது’ – நீதிமன்றம் அதிரடி!!
அந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்குபெறவுள்ளனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிமுக வேட்பாளர் அசனாவிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு மோடி வரவுள்ளதால் பாதுகாப்பு பணிகளும் மிக தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை புதுவைக்கு பிரதமர் வரவுள்ளதால் தற்போது அந்த பகுதியில் நாளை முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.