கேரளாவில் பரவிவரும் புதுவகையான தக்காளி காய்ச்சல் நோய் பாதிப்பு குறித்த முக்கிய விளக்கம் ஒன்றை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்துள்ளார்.
தக்காளி காய்ச்சல்:
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஆட்டிப்படைத்து வரும் நிலையில், கேரளாவில் புதிய வகை காய்ச்சல் ஒன்று தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், இந்த தக்காளி காய்ச்சலுக்கு இதுவரை 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சல் ஏற்பட்டால், அதிக காய்ச்சல், அசதி, கை, கால்கள் வெள்ளை பட்டு போகுதல், உடலில் சிவப்பு நிற தடிப்பு போன்றவை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், இந்த நோய் தக்காளியால் பரவுவது இல்லை என்றும், இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி போல புள்ளிகள் வரும். இது ஒரு வகையான காய்ச்சல் தான், இதனால் பெரிய பாதிப்பு இல்லை என தெரிவித்தார். இதுவரை தமிழகத்தில் இந்த காய்ச்சல் பாதிப்பு, உறுதி செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்