டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எரிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி மற்றும் வெண்கலம் என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் அதே ஜப்பான் நாட்டில் தொடங்கியது. இதில் இந்தியாவை சார்ந்த 54 வீரர், வீராங்கனைகள் 9 வகையான விளையாட்டில் களமிறங்கினர். இந்த நிலையில், இந்த போட்டிகளுக்கும் கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்களான தேவேந்திரா மற்றும் சுந்தர் சிங் ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். இந்திய வீரர்களான தேவேந்திரா 64.35 மீட்டர் தூரம் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கமும், சுந்தர் சிங் 24.1 மீட்டர் தூரம் வீசி எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் ஒரே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த உற்சாக தருணத்தில், இந்தியாவை சேர்ந்த மக்களும் இந்த விளையாட்டு வீரர்களின் வெற்றியை கொண்டாடி வருவது குறிப்பிடத் தகுந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்