டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எரிதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர் சுமித் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தங்க பதக்கம் :
ஜப்பான் தலைநக
ர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் அதே ஜப்பான் நாட்டின், தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. இதில் இந்தியாவை சார்ந்த 54 வீரர், வீராங்கனைகள் 9 வகையான விளையாட்டில் களமிறங்கினர். இந்த நிலையில், இந்த போட்டிகளுக்கும் கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதுவரை, பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. இதில், 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் அவானி லெகாரா தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். மேலும், ஈட்டி எரிதல் போட்டியில் தேவேந்திராவும் , சுந்தர் சிங்கும் வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வாங்கி அசத்தியிருந்தார். இது மட்டுமல்லாமல், டேபிள் டென்னிஸில் பவினா மிகச் சிறப்பாக விளையாடி வெள்ளி பதக்கம் வாங்கி பெருமைப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், இந்தியா சார்பில் ஈட்டி எரிதலில் கலந்து கொண்ட சுமித் ஆண்டில், முதல் வாய்ப்பில் 66.95மீ தூரம் எரிந்து உலக சாதனை படைத்தார். மேலும் அதற்கு அடுத்தடுத்த வாய்ப்புகளில் சளைக்காமல் விளையாடி, 68.55 மீ தூரம் எரிந்து உலக சாதனையை தன் வசம் ஆக்கிக் கொண்டார். இவர் இறுதி வாய்ப்பான 5ம் வாய்ப்பில் உலக வரலாற்றில் கொண்டாடும் விதமாக, தங்க பதக்கம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது இந்த ஆண்டுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இது இரண்டாவது தங்கம் என்பது குறிப்பிடத் தகுந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்