டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் 50 மீ துப்பாக்கி சுடுதலில் அவனி லெகாரா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
வெண்கலப் பதக்கம்:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி நமது நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இதில் கடந்த சில மணித்துளிகளுக்கு முன்பு ஆடவருக்கான T64 உயரம் தாண்டுதலில், 2.07 மீ உயரத்தை தாண்டி நமது இந்திய வீரரான பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதனால், பதக்க பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வந்தது. இதில், தற்போது இந்திய வீராங்கனையான அவனி லெகாரா மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இவர் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். இதன் மூலம், பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை பதிவு செய்தார்.
இவரது பெருமைக்கு, மேலும் வலு சேர்க்கும் விதமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வாங்கிய அவனி லெகாராவுக்கு 3 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், இன்று நடைபெற்ற 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று மீண்டுமொரு சாதனையை பதிவு செய்துள்ளார். இதனால் இவர் பாரா ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற மகிழ்ச்சியில் நாடு திரும்ப உள்ளார்.
இவர்களது இந்த செயலால், இந்தியாவின் விளையாட்டு சார்ந்த செயலில் புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த பாரா ஒலிம்பிக் போட்டிகள் முடிய உள்ள நிலையில், இந்தியாவின் இந்த பதக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் சார்ந்த அறிவிப்பு மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்