தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தற்போது, 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தொடர்ந்து பெய்யும் மழை:
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்று வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இடியுடன் கூடிய கனமழை:
நீலகிரி, கரூர், ஈரோடு, தேனீ, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கபட்டு உள்ளது.
பாத்ரூமில் இளம் பெண்ணை சில்மிஷம் செய்யும் ஹீரோ – வியூஸ்களை அள்ளும் வெப்சீரிஸ்..!
இந்த சுழற்சியால் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.