தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடையிடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
IND vs NZ 2023: அரையிறுதியில் சொதப்பும் விராட் கோலி…, இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!